Quantcast
Channel: யுவகிருஷ்ணா
Viewing all articles
Browse latest Browse all 406

குழந்தைகளை இப்படி காட்டலாமா?

$
0
0
சினிமாவில் விலங்குகள் கூட துன்புறுத்தப்படக்கூடாது என்று இந்திய தணிக்கை வாரியம் கடுமை காட்டி வருகிறது. எனவே விலங்குகள் கதைக்கு தேவைப்படும் காட்சிகளை கூட நிஜ விலங்குகளை பயன்படுத்தாமல், கிராஃபிக்ஸ் முறையில் காட்சிகளை அமைக்கிறார்கள் படைப்பாளிகள். நிலைமை இப்படியிருக்கையில் சமீபமாக இந்திய சினிமாவில் பாலியல் காட்சிகளில் குழந்தை நடிகர்களை நேரடியாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. தணிக்கை வாரியம் தூங்கிக் கொண்டிருக்கிறதா, சமூக ஆர்வலர்களும், பெண்ணுரிமைப் போராளிகளும் டிவியில் மெகாசீரியல் பார்த்துக் கொண்டிருக்கிறார்களா?
இந்திய தணிக்கை வாரியத்துக்கு தலைமை செயல் அலுவலராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட ராகேஷ்குமார் ஒரு பத்திரிகை பேட்டியில் சொல்கிறார்.
“ஓர் இந்திப்படம் பார்த்துக்கொண்டிருந்தபோது என்னுடைய ஐந்து வயது மகள் என்னை கேட்டாள். “அப்பா! இந்த படத்துலே ‘அந்த’ மாதிரி சீன் ரொம்ப ஓவரா இல்லே?”. இன்னொரு படம் பார்க்க அவளோடு போயிருந்தேன். குழந்தையும் இதை பார்க்கிறாளே என்று பல காட்சிகளில் நெளிந்தேன். இனிமேல் UAசான்றிதழ் பெற்ற படங்களைகூட குழந்தையோடு போய் பார்க்கக்கூடாது என்று முடிவெடுத்தேன்”
‘வற்றாத நதியெல்லாம் கடலிடம் போகும். அந்த கடலே வற்றிவிட்டால் எங்கே போகும்?’ என்று நாமும் சினிமா வசனம் பேசவேண்டியதுதான். சென்சார் செய்யும் தணிக்கை வாரியத்தின் தலைமை அதிகாரியே சினிமா பார்த்து நெளியும்போது, நம்முடைய நிலைமை? U/Aசான்றிதழ் பெற்ற படங்கள் மட்டுமல்ல. Uசான்றிதழ் பெற்ற படங்களையேகூட குழந்தைகளோடு பார்க்க முடியவில்லை. ஐந்து வயது குழந்தையோடு சினிமாகூட பார்க்க முடியவில்லை என்று அவர் குமுறும்போது, குழந்தைகளையே பயன்படுத்தி ‘அந்த’ மாதிரி காட்சிகள் வருகிறதே. அதை நாம் எப்படி சகித்துக் கொள்வது?
  • ‘நடுநிசி நாய்கள்’ என்றொரு படம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்தது.டீனேஜைகூட எட்டாத மகனோடு, அவனுடைய அப்பாவே ஓரின பால் உறவு கொள்வதாக காட்சி. இதன் காரணமாக அந்த சிறுவன் மனநோயாளியாகி, வளர்ந்து பாலியல் வக்கிரம் நிறைந்தவனாக மாறுவதாக கதை.
  • ‘விடியும் முன்’ என்கிற பெயரில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு படம் வெளியாகியது. பதினோரு, பன்னிரெண்டு வயது மதிக்கத்தக்க சிறுமியை, அறுபது வயது கடந்த ஒரு பெரியவருக்கு ஏற்பாடு செய்து அழைத்து வருகிறாள் ஒரு பாலியல் தொழிலாளி. அந்த குழந்தைக்கு மேக்கப் செய்து அழகுபடுத்தி தயார் படுத்துகிறாள். அப்போது குழந்தை அவளிடம் கேட்கிறாள். “நீ மேக்கப் போட்டுக்கலையா?”. அதற்கு அவள் சொல்லும் பதில், “இன்னைக்கு நீதான் ராணி”. அந்த குழந்தையிடம் பெரியவர் பாலியல் வக்கிரத்தை காட்டுவதாக அடுத்த காட்சி.
  • ‘கோலி சோடா’ என்கிற திரைப்படம் தற்போது வெற்றிகரமாக அரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. கடலோரத்தில் ஒரு தனிமையான, இடிந்துபோன தேவாலயம். பத்து வயது மதிக்கத்தக்க சிறுமி, அங்கே தினமும் பிரார்த்தனைக்கு வருகிறாள். ஒரு நாள் அவள் வரும்போது சில இளைஞர்கள் மது அருந்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த சிறுமியைப் பார்த்ததுமே, அவளை பாலியல் வல்லுறவு செய்ய முயற்சிக்கிறார்கள்.
வாசிக்கும்போதே காறித்துப்பலாம் என்று கோபம் வருகிறது இல்லையா?
இதெல்லாம் சாம்பிள்தான். இன்னும்யோசித்துப்பார்த்தால்குழந்தைகளைவைத்துஇந்தசினிமாக்காரர்கள்என்னவெல்லாம்அயோக்கியத்தனம்செய்கிறார்கள்என்றுநீங்களேசிந்தித்து, இம்மாதிரிபடங்களின்காட்சிகளைகொண்டுபெரியபட்டியல்ஒன்றைதயாரிக்கமுடியும். ஒப்பீட்டளவில்பார்க்கப்போனால்தமிழில்இந்தமோசமானபோக்குகுறைவு. அப்படியென்றால்மற்றமொழிபடங்களில்எவ்வளவுஆபாசம்தலைவிரித்துஆடுமென்றுபார்த்துக்கொள்ளுங்கள்.
அப்படியெல்லாம் ஒரேயடியாக தீர்ப்பு எழுதிவிடாதீர்கள் என்கிறார் பெண் இயக்குனரான சந்திரா தங்கராஜ்.
“உலகளவில் எடுக்கப்படும் இதுபோன்ற திரைப்படங்களை நாம் சமீபமாக நிறைய பார்க்க ஆரம்பித்திருக்கிறோம். அந்த படங்களிலும் குழந்தைகள் பயன்படுத்தப்படுகிறார்கள். அப்படங்களை பார்க்கும்போது நமக்கு வராத தார்மீக உணர்வு நம் ஊரில் எடுக்கப்படும் படங்களை பார்க்கும்போது மட்டும்தான் வருகிறது. நம்முடைய பண்பாட்டு, கலாச்சாரப் பின்னணி காரணமாக நம் குழந்தைகளை இதுபோல காணும்போது சீற்றம் அடைய வைக்கிறது. தமிழ் குழந்தையை திரையில் அப்படி சித்தரிப்பதா என்று கோபம் வருகிறது.
ஆணோ, பெண்ணொ ஐந்தில் ஒரு குழந்தை இம்மாதிரி பாலியல் சீண்டலை எதிர்கொள்ளும் மோசமான சமூகத்தில் இருக்கிறோம். இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை, எல்லா ஊடகங்களைப் போலவே சினிமாவும் மக்களுக்கு செய்தாக வேண்டும். ஆனால் இப்பிரச்சினையை கையாளும் படைப்பாளிகளுக்கு இதுகுறித்த அடிப்படை தெளிவு இல்லாவிட்டால், காட்சிகள் பல்லிளித்துவிடும்.
எனவே, இம்மாதிரி காட்சிகளை தடை செய்யவேண்டும் என்றெல்லாம் சொல்லக்கூடாது. அவற்றுக்கான தேவை இருக்கிறது. ஆனால் அது மிக ஜாக்கிரதையாக கையாளப்பட வேண்டும் என்பதே என் கருத்து” என்கிறார் சந்திரா.
‘விடியும் முன்’ திரைப்படத்தின் வசனகர்த்தா ஆப்ரகாம் பிரபுவும் இதேமாதிரிதான், அப்படம் மீது குற்றம்சாட்டி எழுதப்பட்ட ஒரு இணையக் கட்டுரைக்கு பதில் எழுதுகிறார்.
“மூன்று வயது குழந்தையை கூட பாலியல் வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டி சமூகத்தில்தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இம்மாதிரி இருண்ட பக்கங்களை புரட்டிப் பார்க்கும் முயற்சி சினிமாவில் அவ்வப்போது நடைபெறுகிறது. கண்களை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று நாம் நினைக்கக்கூடாது. நிஜங்களை சற்று தைரியமாக அவ்வப்போது உரசிப்பார்க்க வேண்டும்” என்கிறார் அவர்.
இக்காட்சிகளில்நடிக்கும்குழந்தைகள், நாளைபள்ளியிலும்வெளியிடங்களிலும்அவர்களைநோக்கிசெய்யப்படும்கேலிகிண்டல்களைஎப்படிசகித்துக்கொள்ளப்போகிறார்கள்?சினிமாவில் குழந்தைகளின் உழைப்பு சுரண்டப்படுவதும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு ஒப்பானதுதான் என்கிறார் பேராசிரியர் சுமதிஸ்ரீ.
“குழந்தைகளை பணியிடங்களில் பணிக்கு அமர்த்துவது குற்றம் என்றால், ஊதியம் தந்து சினிமாவில் நடிக்க வைப்பதற்கு மட்டும் எப்படி விலக்கு அளிக்கமுடியும்? சினிமாக்களில் நம் குழந்தைகள் துப்பாக்கி முனையில் மிரட்டப்படுகிறார்கள். உயரமான கட்டிடங்களில் இருந்து தூக்கிப் போட்டுவிடுவேன் என்று வில்லன்களால் பயமுறுத்தப் படுகிறார்கள். அந்தரத்தில் தொங்கியபடியே கதறுகிறார்கள். நம் கதாநாயகர்களின் வீரபிரதாபத்தை பறைசாற்ற குழந்தைகள் விதம் விதமாக சித்திரவதைப்படுகிறார்கள்.
போதாதற்கு இப்போது பாலியல் காட்சிகளிலும் அவர்களை பயன்படுத்தத் தொடங்கியிருப்பது மோசமான ஆரம்பம். வன்புணர்வு என்கிற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாத குழந்தைகளை அம்மாதிரி காட்சிகளில் நடிக்க வைப்பதைவிட மோசமான கலாச்சாரம் வேறெதுவுமில்லை. சினிமாக்காரர்களுக்கு குறைந்தபட்ச பொறுப்புணர்வாவது வேண்டாமா. ஒரு படத்தில் நடிப்பதோடு அந்த குழந்தையின் வாழ்வு முடிந்துவிடுகிறதா என்ன. திரைப்படங்களில் வில்லனாக நடித்த நம்பியார் நிஜமாகவே கெட்டவர்தான் என்று உறுதியாக நம்புகிற சமூகம், ஒரு மாதிரி பாத்திரங்களில் நடித்த குழந்தைகளை எப்படி நடத்தும். படிப்பு, வேலை, திருமணம் என்று தொடரப்போகும் வாழ்வில், மோசமான ஒரு பாத்திரத்தில் நடித்த குழந்தை எவ்வளவு பேரை எப்படியெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏளனங்களையும், பரிதாபத்தையுமே தொடர்ந்தால் மனப்பிறழ்வு ஏற்பட்டு விடாதா. தங்களுடைய குழந்தைப் பிராயம் களவாடப்படுவது கூட தெரியாமல், சினிமாவில் பயன்படுத்தப்படும் குழந்தைகள் இருக்கிறார்கள். சட்டப்பூர்வமாகவே இந்த அநியாயங்களுக்கு அரசு முடிவு கட்ட வேண்டும்” என்று சூடாகப் பேசுகிறார் சுமதிஸ்ரீ.
சமீபமாக நம் தேசத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை சகித்துக்கொள்ள முடியாத குற்றமாக பார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் இதற்கு எதிராக ‘நிர்பயா சம்பவம்’ போன்ற கொடுஞ்செயல்களுக்கு பிறகாக கிளர்ந்தெழுந்து வருகிறார்கள். ஆனால் சமூகத்தின் இந்த உணர்வுக்கு நேர்மாறாக இந்தியத் திரைப்படங்களில் மட்டும் பாலியல் காட்சிகள் அதிகரித்துக்கொண்டே போகிறது. முத்தமிடுதல், ஆபாச அசைவுகள், கள்ள உறவு, ஐட்டம் பாடல், படுக்கையறைக் காட்சிகள், வன்புணர்வு என்று காட்சிகள் இல்லாத படங்களையே விரல்விட்டு எண்ணிவிடலாம். பெண்ணை போகப்பொருளாக மட்டுமே சினிமா முன்வைக்கிறது என்கிற விமர்சனத்தில் உண்மை இல்லாமல் இல்லை. இக்காட்சிகளில் இப்போது குழந்தைகளையும்கூட விட்டு வைப்பதில்லை என்பதுதான் அநியாயம். தலைமை தணிக்கைத்துறை அதிகாரியே கூட தன் குழந்தையோடு படம் பார்க்க முடியவில்லை என்றால் எப்படிப்பட்ட சீரழிவுக்கு நம் சினிமா ஆளாகியிருக்கிறது?
“நாங்கள் தியேட்டரில் படம் பார்ப்பதை எங்கள் பெற்றோர் விரும்புவதில்லை. படம் பார்த்துவிட்டு வகுப்பறையில் வந்து தோழிகள் சொல்லும் கதைகளையும், காட்சிகளையும் கேட்கும்போது, எங்கள் பெற்றோரின் அச்சம் நியாயம்தான் என்று எண்ண வேண்டியிருக்கிறது” என்கிறார் சென்னையில் +2 படிக்கும் மாணவியான அபிநயா.

படைப்பாளிகளுக்கும் வணிக நெருக்கடி இருக்கிறது என்பதும் உண்மைதான். அதற்காக சமூக அக்கறைக்கு எதிரான திசையில் அவர்கள் பயணிக்கக்கூடாது.அதே நேரத்தில் அரதப்பழசானநம்முடையதணிக்கைநடைமுறைகளைநவீனப்படுத்த வேண்டிய காலக்கட்டத்திலும் இருக்கிறோம். தணிக்கையில் அரசியல் தலையீடுகள் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டுகளையும் புறந்தள்ள முடியாது. ஒவ்வொரு தரப்பையும் நோக்கி நாம் தனித்தனியாக விரல் சுட்டி குற்றம் சாட்ட வேண்டியதில்லை. நூற்றாண்டு கண்ட இந்திய சினிமா, ஒட்டுமொத்தமாக தன்னை கறாரான சுயபரிசீலனை செய்துக்கொண்டு, மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

(நன்றி : புதிய தலைமுறை)

Viewing all articles
Browse latest Browse all 406

Trending Articles


வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்


எல்லாம் நாடக மேடை – பாடலாசிரியர் யார்?


சித்தன் அருள் - 1883 - கேள்விகளுக்கு அகத்தியப் பெருமானின் பதில்கள்!


தேசிய விருது பெற்ற படத்தை வெளியிடுகிறார் வெற்றிமாறன்


பதினேழு வயதுக் கிராமத்துப் பெண்


கணவன் கண் முன்னே துப்பாக்கி முனையில் மனைவி கூட்டு பலாத்காரம்..!


பட்டைய கிளப்பும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் 2வது டிரைலர்


நாராயண பட்டத்ரி


பாக்கியசாலிகளாக்கும் காமாட்ஷி அம்மன் நவாவரண பூஜை


ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைந்த விவேக்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>