Quantcast
Channel: யுவகிருஷ்ணா
Viewing all articles
Browse latest Browse all 406

கமால் ஹாசன்

$
0
0
"என்ன ரங்கராஜன் சொல்றீங்க? கமல் ஒரு முஸ்லீம். எனக்கு நல்லாவே தெரியும்”

“சார். எனக்கு அவங்க ஃபேமிலியை நல்லாவே தெரியும். கமல் ஒரு அய்யங்காரு. அவங்க அப்பா லாயரு”

“பாருங்க ரங்கராஜன். நான் சொல்றதை கேளுங்க. அவரோட பேரு கமால் ஹாசன். சினிமாவுக்காக பாலச்சந்தர் கமல்ஹாசன்னு மாத்தியிருக்காரு. அவங்க அண்ணனுங்க பேரெல்லாம் கூட பாருங்க ஹாசன்னுதான் முடியும்”

ரா.கி.ரங்கராஜனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. எல்லாம் தெரிந்த எடிட்டருக்கு ஏன் இந்த சின்ன விஷயம் போய் தெரியவில்லை. அதுவும் அவர் சொல்வதுதான் சரி என்று சின்னக் குழந்தை மாதிரி அடம் பிடிக்கிறாரே? இத்தனைக்கும் கமல் பற்றியும், அவரது குடும்பம் பற்றியும் தமிழ்நாட்டுக்கே ரொம்ப வருஷமாக தெரியுமே?

ரா.கி.ரங்கராஜன் எடிட்டரிடம் சமரசத்துக்கு வருகிறார்.

“ஒண்ணு செய்யலாம் சார். நம்ம செல்லப்பாவை அனுப்பி கமலோட அப்பா கிட்டேயே பேசவைக்கிறேன்”

எடிட்டர் இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக் கொள்கிறார். செல்லப்பா, குமுதம் இதழின் நிருபர்.

கமல்ஹாசனின் தந்தை சீனிவாசன் அப்போது சென்னையில்தான் இருந்தார். செல்லப்பா அவரை சந்தித்து பேசினார். ஹாசன் என்கிற பெயரில் தனக்கு ஒரு நண்பர் ஜெயிலில் (சீனிவாசன், சுதந்திரப் போராட்டத்தில் சிறைசென்ற காங்கிரஸ்காரர்) இருந்ததாகவும், அவரது நினைவாகவே தன் குழந்தைகளுக்கு ஹாசன் என்கிற பெயரை சூட்டியதாகவும் சொல்கிறார்.

“எம்புள்ளையை தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோன்னு சொல்லுறாங்க. ஆனா, ஒருநாள் கூட அவன் என்னை ஷூட்டிங்குக்கு கூட்டிக்கிட்டு போனதே இல்லை”

“சார், நான் வேணும்னா உங்களை ஷூட்டிங்குக்கு கூப்பிட்டுக்கிட்டு போகட்டா?”

“ஓக்கேப்பா. ஆனா, எனக்கு கமல் ஷூட்டிங் பார்க்க ஆசையில்லை”

“ரஜினி ஷூட்டிங்?”

“அதுவும் வேணாம். சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே. எனக்கு சிலுக்கு சுமிதாவை ரொம்பப் பிடிக்கும். அந்தப் பொண்ணு நடிக்கிற ஷூட்டிங்கைதான் பார்க்கணும்”

ஆபிசுக்கு திரும்பிய செல்லப்பா, கமலின் தந்தையை சந்தித்துப் பேசியதையும், அவர் அய்யங்கார்தான் என்பதையும் எடிட்டரிடம் உறுதிப்படுத்துகிறார். கூடவே, சிலுக்குவை அவர் பார்க்க ஆசைப்பட்டதையும்.

“அப்போன்னா நான்தான் இவ்ளோ நாளா தப்பா நினைச்சுக்கிட்டு இருந்தேனா? சரி செல்லப்பா. அவங்க அப்பா ஆசைப்பட்ட மாதிரியே சிலுக்கு ஷூட்டிங்குக்கு கூட்டிக்கிட்டு போங்க. அதை அப்படியே ஒரு ஸ்டோரியா எழுதிக் கொடுத்துடுங்க”

குமுதம் செல்லப்பா ஏற்பாட்டில் ஒரு ஷூட்டிங்கில் சிலுக்கை சந்திக்கிறார் சீனிவாசன். சில நாட்கள் கழித்து பரமக்குடிக்கு திரும்பியதும் சிலுக்கை தான் சந்தித்த நிகழ்வை ‘ஜில்’லென்று எழுதி குமுதத்துக்கு கடிதமாக அனுப்புகிறார். அதற்குள் செல்லப்பா எழுதிய கட்டுரை குமுதத்தில் அச்சாகி விட்டதால், சீனிவாசனின் சிலுக்கு கட்டுரையை பிரசுரிக்கவில்லை.

ரா.கி.ரங்கராஜன் மூலமாக பின்னர் சிலுக்கு குறித்து தன் தந்தை இப்படியொரு கடிதம் எழுதியதை அறிந்தார் கமல். அந்த கடிதத்தை குமுதம் அலுவலகத்தில் கேட்டு வாங்கிக் கொண்டவர், பத்திரமாக இன்னும் பாதுகாத்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

Viewing all articles
Browse latest Browse all 406

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>