Quantcast
Channel: யுவகிருஷ்ணா
Viewing all articles
Browse latest Browse all 406

விஸ்வரூபம் : சூதாட்டம்

$
0
0
அந்தகுறுகியசந்திப்பில்குறைந்ததுஆயிரம்பேர்குழுமியிருந்தார்கள். சோகம், கோபம், ஆவேசம், வெறி, விரக்தியென்றுவிபரீதமானஉணர்வுகள். கூட்டத்தைவிலக்கிமெதுவாகஒருவெள்ளைநிறக்கார்உள்நுழைகிறது. கார்நின்றதுமேஇறங்குபவர்கள்எல்லாரும்வெள்ளுடையும், தலையில்வெள்ளைக்குல்லாவும்அணிந்திருக்கிறார்கள். ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தகூட்டம்அமைதியாகிறது. யாராவதுவிபரீதமாகநடந்துக்கொள்வார்களோஎன்றுகூட்டத்தில்இருந்தஒவ்வொருவருக்கும்அச்சம். அசம்பாவிதம்ஏற்பட்டுவிடுமோஎன்றுகாவலுக்குநின்றகாவலர்களுக்கும்பயம். கிட்டத்தட்டவன்முறைச்சூழல். ம்ஹூம். அச்சப்படுவதுமாதிரிஏதும்நடந்துவிடவில்லை. மாறாகஅவர்களைவாழ்த்திகோஷங்கள்தான்முழங்கப்பட்டது. பளீரெனஉதயசூரியனால்விடிகாலைகாரிருள்விலகிஒளிவெள்ளம்பாய்வதுமாதிரி, கூட்டத்தில்வார்த்தைகளில்விவரிக்கஇயலாசமத்துவஉணர்வுமேலெழுந்தது. மரியாதையாகஅவர்களுக்குஅந்தகருப்புநிறகேட்திறந்துவிடப்பட்டது. கமல்ஹாசனைசந்தித்துஆதரவுதெரிவிக்கஉள்ளேசென்றார்கள்.

கமலுக்கும் இஸ்லாமியர்களுக்கும் என்ன பிரச்சினை ஏற்பட்டுவிட முடியும்? கமலைப் போய் இஸ்லாமியர்கள் எதிரியாக கருத முடியுமா? 
தமிழகம் மதச்சார்பு கொண்ட மாநிலமாக மாறிவிட்டது என்று கமலோ அல்லது வேறு யாரோ நினைத்தால் அதைவிட பெரிய பைத்தியக்காரத்தனம் வேறு எதுவுமில்லை. ஆயிரம் ’அம்மா’க்கள் தோன்றினாலும் இது தமிழர் தந்தை வாழ்ந்த மண். அவரிடம் சாமானியத் தமிழர்கள் எதை கற்றார்களோ இல்லையோ, சகிப்புத்தன்மையை கற்றிருக்கிறார்கள். இன்று மட்டுமல்ல. இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பெரியார் தமிழகத்தை மதவெறி சக்திகளிடமிருந்து காப்பார். திராவிடர் கழக அனுதாபியான கமலுக்கும் இது நிச்சயம் தெரியும். “இங்கிருந்து வெளியேறி விடுவேன்” என்று அவர் அன்று மிரட்டியது சமநிலை குன்றிய ஒருமாதிரியான சுயபச்சாதாபத்தில்தான். 
அன்று மாலை கமல் வீடு முன்பாக திரண்டிருந்த கூட்டத்தில் நானும் நண்பர்களோடு இருந்தேன். கமல் ரசிகன் என்கிற முறையில் அவரது சோகம் என்னையும் சோகப்படுத்தி இருந்தது. இரவு எட்டரை மணிவாக்கில் கருப்புச் சட்டையில், போதுமான மேக்கப்பில் பால்கனியில் கமல் தோன்றினார். பரவசமான அந்த நிமிடங்களை என்னவென்று வர்ணிப்பது? எல்டாம்ஸ் சாலை முழுக்க ஒலித்த ‘வாழ்க’ கோஷம் போயஸ் தோட்டத்தை எட்டியிருக்கும். அவர் அதட்டினால் கூட்டம் அடங்கியது. கைத்தட்டலையும், விசிலையும் எதிர்ப்பார்த்து அவரது பேச்சில் சிறு இடைவெளி கொடுத்தால், அதை உணர்ந்துக்கொண்டு கூட்டம் ஆர்ப்பரித்தது. கூடியிருப்பவர்கள் தன்னிடம் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை புரிந்துக்கொண்டு, அதற்கேற்ப தன்னுடைய பிரத்யேக ஸ்டைலை காட்டினார் கமல். சட்டென்று காலை ஒரு திண்டின் மீது வைத்து, கால்முட்டியில் ஊன்றி, கையை கன்னத்தில் வைத்து அவர் கொடுத்த ‘போஸ்’ ஒன்றே போதும். அள்ளியது விசில். “என்னுடைய ரசிகர்களாக இஸ்லாமிய சகோதரர்களும் இருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு ஒரு ‘கேப்’ கொடுக்க, அதை உணர்ந்து கூட்டத்தில் இருந்த இஸ்லாமிய தோழர்கள் ஒவ்வொருவராக “நானும் இஸ்லாமியன்தான்” என்று குரல் கொடுத்துக் கொண்டே கை உயர்த்தினார்கள். ஆயிரக்கணக்கானோரை அசால்ட்டாக ரிங்மாஸ்டராக அன்று வேலை வாங்கினார் கமல். மணிரத்னத்தின் ‘இருவர்’ படத்தில் மோகன்லால் பால்கனி வழியாக ரசிகர்களை சந்திக்கும் காட்சியை ஒத்த காட்சி அது.

விஸ்வரூபம் படம் தொடங்கியதிலிருந்து, அது தொடர்பான இன்றைய நிகழ்வுகள் வரை வரிசைக்கிரமமாக யோசித்துப் பாருங்கள். ஒரு க்ரைம் தில்லர் நாவலை வாசிப்பதைப் போன்ற சுவாரஸ்யம் கிடைக்கும். தயாரிப்பு கை மாற்றம், டி.டி.எச். ரிலீஸ், தியேட்டர் அதிபர்களோடு மோதல், டி.டி.எச்.வாபஸ், இஸ்லாமியர் எதிர்ப்பு, அரசாங்கம் தடை, நீதிமன்றத்தில் முன்னாள் மற்றும் இன்னாள் அரசுத் தலைமை வழக்கறிஞர்கள் ஒரு சினிமாவுக்காக காரசார மோதல், தடை நீக்கம், தடை நீக்கத்துக்கு இடைக்காலத் தடை, அரசியல் சினிமா பிரமுகர்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு, கமல் ஜெ தனிப்பட்ட மோதல் மாதிரியான தோற்றம், வெளியான இடங்களிலெல்லாம் வரலாறு காணாத வரவேற்பு, அகில இந்தியப் பிரச்னையாக உருமாறுதல், இந்தி ரிலீஸ், மீண்டும் பேச்சுவார்த்தை என்று இதுவரை நடந்தவையே கன்னித்தீவின் தொடர் சுவாரஸ்யத்தை மிஞ்சுகிறது. விகடனோ, குமுதமோ உடனடியாக கமலை அணுகி ஒரு ‘மினித்தொடர்’ எழுத ஏற்பாடு செய்தால் தமிழ்நாடே அதிரும்.
விஸ்வரூபம் ஒரு கலைப்படைப்பு. கலைஞனின் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்றெல்லாம் நாம் நினைக்கவில்லை. சினிமா என்பது பிரதானமாக வியாபாரம். வியாபாரி தனக்குக் கிடைக்கும் கூடுதல் லாபத்துக்காக ‘கட்டிங்’ கூட கொடுக்க வேண்டியிருக்கும். பாலிவுட்டில் இது ஒரு கலாச்சாரமாகவே ஆகிவிட்டது. நூறு கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படும் படம் என்பது எத்தனை பேரின் கண்ணை உறுத்தியிருக்கும்? இனி தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் ‘கட்டிங்’குக்காகவே தங்கள் பட்ஜெட்டில் ஒரு பகுதியை ஒதுக்க வேண்டியிருக்குமென தோன்றுகிறது.

இந்த ஒட்டுமொத்த விஸ்வரூப விவகாரத்தில் இஸ்லாமியர்கள் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. முன்பாக துப்பாக்கி விவகாரத்திலும் திரைமறைவாக ஏதோ கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்ததாகவும், அது சரிபடாத காரணத்தாலேயே இஸ்லாமியர்களது உணர்வுகளை தூண்டிவிட்டு மதப்பிரச்சினையாக மாற்றினார்கள் என்றும் சில சினிமாக்காரர்கள் சொல்கிறார்கள். ஒரு சில விஷமிகளின் சுயநலத்துக்கு ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் கெட்டப் பெயர் சம்பாதிக்க வேண்டியிருப்பது வேதனையான நிகழ்வு. தகப்பன் மகள் உறவை கொச்சைப்படுத்தி ஆபாசமாக பேசக்கூடிய ஒருவர் எப்படி அன்பைப் போதிக்கும் புனித மார்க்கமான இஸ்லாத்துக்கு விசுவாசமாக இருக்க முடியும்? இவர்களெல்லாம் தங்கள் பிரதிநிதிகள், தங்கள் சுயமரியாதையை காக்க போராடுகிறார்கள் என்று இஸ்லாமியர்கள் நம்பினால் அதைவிட பெரிய கொடுமை வேறெதுவுமில்லை. தங்களுக்குள் வளர்ந்துவிட்ட கருப்பு ஆடுகளை இனங்கண்டு இஸ்லாமியர்கள் ஒதுக்க வேண்டிய நேரமிது. இல்லையேல் மும்பையைப் போல எப்போதும் மதரீதியான பதட்டம் நிலவக்கூடிய அபாயச்சூழலுக்கு நம் அமைதிப்பூங்காவும் ஆட்படுத்தப்பட்டு விடும்.

கமலும் சும்மா இல்லை. எப்போது படம் எடுக்கும்போதும் ஏதேனும் சர்ச்சையை கச்சை கட்டிக் கொள்வது அவரது வாடிக்கை. மதரீதியான எதிர்ப்பு தோன்றியதுமே, சம்பந்தப்பட்டவர்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டி, சமரசப்படுத்தி அமைதியாக படத்தை வெளியிட்டிருக்க முடியும். கமல் ரசிகன் என்கிற முறையில் அவரது படம் யாருடைய வயிற்றெரிச்சலையோ கொட்டிக்கொண்டு வசூல்மழை பொழிவதில் நமக்கும் உடன்பாடில்லை.
 மடியில் கனம் இருப்பதால்தான் அவருக்கு வழியில் பயம். தமிழுக்குப் பிறகு வெளியிடப்போகும் விஸ்வரூபத்தின் இந்தி வடிவத்துக்கு ஏன் முதலில் தணிக்கைச் சான்றிதழ் வாங்கினார்? ஏனெனில் தமிழ் திரைப்படங்களுக்கான தணிக்கை கொஞ்சம் கறாரானது. இதே படத்தின் இந்திவடிவம் கொஞ்சம் தாராளமாக தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் வாங்கிவிட்டால், அதை பின்பற்றுவதைத் தவிர தமிழ் தணிக்கையாளர்களுக்கு வேறு மார்க்கமில்லாமல் போய்விடும். இந்தியத் துணைக்கண்ட இஸ்லாமியர்களின் மனவோட்டமும், தென்கிழக்கு ஆசிய இஸ்லாமியர்களின் மனவோட்டமும் அடிப்படையில் வேறு வேறானது. எனவேதான் மலேசியாவில் முதலில் படத்தை போட்டுக்காட்டி, இஸ்லாமியர்கள் இப்படத்தை ஆட்சேபிக்க ஒன்றுமில்லை என்று நிறுவ முயன்றார். இருபத்தைந்தாம் தேதி பட வெளியீடு என்று அறிவித்துவிட்டு, திரையரங்குகளில் முன்பதிவும் ஆரம்பித்துவிட்டு கடைசிக்கட்டத்தில் இருபத்தியொன்றாம் தேதி இஸ்லாமிய அமைப்புகளுக்கு படம் போட்டுக் காட்டுகிறார். நீதிமன்றத்துக்கோ அல்லது வேறு அமைப்புகளுக்கோ போய் தடை வாங்கிட அவர்களுக்கு போதுமான அவகாசம் கொடுக்கக்கூடாது என்கிற எண்ணம் அவருக்கு இருந்ததைப் போல தோன்றுகிறது. விஸ்வரூபம் திரைப்படம் ஒட்டுமொத்தமாக ஐந்து மணி நேரத்துக்கு மேலாக நீள்வதாகவும், பாதி படம்தான் முதல் பாகமாக இப்போது வந்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இதில் இந்திய முஸ்லிம்களைப் பற்றி ஆட்சேபகரமாக எதுவுமில்லை, ஏனெனில் கதை அமெரிக்காவிலும், ஆப்கானிஸ்தானிலும் நகர்கிறது என்று சமாதானமும் சொல்கிறார்கள். ஆனாலும் இரண்டாம் பாகம் என்று சொல்லப்படும் மீதி படம் இந்தியாவில் நடப்பதாக இருக்கிறது. அப்போது இந்திய முஸ்லிம்கள் சம்பந்தப்படாமல் கதை நகர வாய்ப்பேயில்லை. இப்போது இஸ்லாமியர் அச்சப்படும்படியான விஷயங்கள் அதில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை இதனால்தானோ என்னவோ படத்தை இரண்டு பாகமாக கமல் வெளியிடுகிறார். முதல் பாகம் ஓடி வெற்றியடைந்துவிட்டால், அதன் தாக்கத்திலேயே இரண்டாம் பாகத்தை பிரச்சினையின்றி வெளியிட்டுவிடலாம் என்றும் அவர் நினைத்திருக்கலாம்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தரப்புமே ஆடம்பரமான கேசினோ அரங்கில் அமர்ந்து சூதாட்டம் ஆடுவதைப் போன்ற சித்திரமே மனதில் எழுகிறது. எதிரில் அமர்ந்திருப்பவனின் கரங்களில் இருக்கும் மூன்று கார்டுகள் என்னவாக இருக்குமென்று யூகித்து ஆடவேண்டும். எப்போதுமே ‘ஏஸ்’ கிடைத்துவிடுவதில்லை. ஒரு கட்டில் நாலு ‘ஏஸ்’ தான் இருக்கமுடியும். நிகழ்தகவு அடிப்படையில் சிந்தித்து யோசித்து விளையாடுபவன்தான் சூதாட்டத்தில் கில்லாடி.
 விஸ்வரூபம் விஷயத்தில் கலைஞரின் கையில் இருந்த மூன்று கார்டுமே ‘ஏஸ்’. மதப்பிரச்சினை, அரசுத்தடை என்று மாநில அளவில் இருந்தப் பிரச்சினையை அவரது அறிக்கை தேசியப்பிரச்சினையாக மடைமாற்றி விட்டது. போதாக்குறைக்கு கமலுக்கும், முதல்வருக்கும் முன்விரோதம் என்று போகிற போக்கில் ஒரு திரியையும் கொளுத்திப் போட்டிருக்கிறார். ஊடகங்களில் கிசுகிசு மாதிரியாக கிசுகிசுக்கப்பட்டுக் கொண்டிருந்த விஸ்வரூபத்தை ஜெயாடிவி அடிமாட்டு விலைக்கு வாங்க முயற்சித்தது என்கிற விவகாரத்தையும் நோண்டினார். காலையில் கமலின் உருக்கமான பேட்டி, மாலையில் கலைஞரின் விவரமான அறிக்கை என்று அந்த நாளிலேயே கமல் தரப்பு ‘ஸ்ட்ராங்’ ஆனது. கமலுக்கு ஆதரவான அனுதாப அலை தமிழ் சினிமாவுலகில் மட்டுமன்றி, மக்கள் மத்தியிலும் வெகுவாக எழும்பத் தொடங்கியது. உச்சநீதிமன்றத்தில் காவிரி விஷயத்தில் தமிழகம் ‘கப்பு’ வாங்கிய செய்தி பின்னுக்கு தள்ளப்பட்டு, விஸ்வரூபம் பிரதானப் பிரச்சினையாக மக்களின் முன்பு ஊடகங்களால் முன்வைக்கப்பட்டது. இந்த பரபரப்பு பரவி பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களும், ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியும் கமலுக்கு ஆதரவாக திரண்டார்கள். மத்திய அமைச்சரே விஸ்வரூபம் பற்றி பேசவேண்டிய கட்டாயம் உருவாக்கப்பட்டது. கலைஞரின் அறிக்கையால் கமலுக்கு பெருவாரியான ஆதரவு திரண்டது. அதே நேரம் கலைஞருக்கும் அரசியல் மைலேஜ் கூடுதலானது. அதிமுக ஆட்சிக்கு எதிரான மனோபாவம் பரவுவது அவரது அரசியலுக்கு லாபம்தானே.. அதுவும் யாரும் எதிர்பாராத ஒரு பிரச்சினையில்? 
கலைஞர் எதிர்ப்பார்த்த மாதிரியே பூனைக்குட்டி வெளியே வந்தது. அதுவரை விஸ்வரூபம் குறித்து எதையும் கண்டுக்கொள்ளாத மாதிரி இருந்த முதல்வர் ஜெயலலிதா தன்னை தற்காத்துக்கொள்ள பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஜெயலலிதாவின் கருத்துகள் ஓரளவுக்கு அவர் தரப்பு சேதாரத்தைக் குறைத்திருக்கிறதே தவிர, முற்றிலுமாக நிலைமையை மாற்றிவிட முடியவில்லை. வேறு வழியின்றி பதினைந்து நாள் தடை முடிந்ததும் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார். ஒருவேளை தடையை நீடித்தால் கலைஞர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்கிற எண்ணம் மக்களுக்கு வலுப்பட்டு விடும்.

தமிழ்நாட்டைத் தவிர உலகெங்கும் வெற்றிகரமாக விஸ்வரூபத்தை வெளியிட்டு விட்டார். கமலால் செலவு செய்யமுடியாத கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புக்கு தமிழக அரசும், சில இஸ்லாமிய அமைப்புகளும் அவருக்கு விளம்பரத்தைத் தேடி தந்திருக்கின்றன. வழக்கமான கமல் படங்களுக்கு கிடைக்கும் ஆதரவை விட பன்மடங்கு ஆதரவை ரசிகர்கள் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்போதைய ரவுண்டில் கமல் வென்றிருப்பதாகவே தெரிகிறது.

Viewing all articles
Browse latest Browse all 406

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>