முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நிலமான லெமூரியாவை முப்பாட்டன் முருகன் ஆண்டான். திராவிட வடுக வந்தேறியான விநாயகன், நம் முப்பாட்டனுக்கு கொடுத்த ஞானப்பழ அரசியல் நயவஞ்சகத் தொல்லைகளை தமிழ்தேசிய வரலாறான ‘திருவிளையாடல்’ திரைப்படத்தில் தமிழ்தேசிய இயக்குனர் ஏ.பி.நாகராசன் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இன்று இந்திய தேசிய ஆரிய வடுக கும்பல் புராணகாலத்திலேயே அவர்கள் விமானம் கண்டுபிடித்துவிட்டதாக கூறி புஷ்பகவிமானம், அது இதுவென்று கதை விடுகிறார்கள். உலகின் முதல் விமானத்தை ஓட்டியது முப்பாட்டன் முருகனே. மயில் வாகனம் விமானப் போக்குவரத்து நிறுவனத்தை உருவாக்கி, விமானத்தில் உலகை ஒரு சுற்று சுற்றி முப்பாட்டன் முருகன் அன்றே உலகசாதனை படைத்துவிட்டான்.
* * * * * *
இன்று நாகரிக தொலைக்காட்சியில் (fashion tv) உடையலங்கார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. உலகின் முதல் நாகரிக நடை நிகழ்வை (fashion walk) நடத்திக்காட்டியது நம் முப்பாட்டன் முருகனே என்கிற பேருண்மையை மேற்கத்திய வடுக வந்தேறிகள் உணரவேண்டும்.
இன்று இருகச்சை (two piece) ஆடைதான் நாகரிகம் என்று இந்த வந்தேறிகள் கூப்பாடு போடுகிறார்கள். ஆனால் நம் முப்பாட்டன் முருகனோ பழனி மலை மீதேறி ஒருகச்சை (single piece) ஆடை அணிந்து, தமிழனின் நாகரிகத்தை அன்றே குன்றிலிட்ட விளக்காக பறைசாற்றியிருக்கிறான். இன்று எதுவெல்லாம் நாகரிகம் என்று உலகம் நம்புகிறதோ, அதையெல்லாம் முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே லெமூரிய தமிழ் தேசிய பேரரசு, முப்பாட்டன் முருகனின் ஆட்சிக்காலத்தில் சாதித்துக் காட்டியிருக்கிறது.
* * * * * *
முப்பாட்டனின் வழித்தோன்றலான திப்பாட்டன் திருவள்ளுவர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வடுக வந்தேறிகளின் தமிழ்நில ஆக்கிரமிப்பை தமிழ்தேசிய நீதிநூலான திருக்குறளில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
அதாவது இந்த தமிழ்தேசிய கீதத்தின் இறுதியில் இடம்பெறும் ‘வடு’ என்கிற சொல், திராவிட வடுக வந்தேறிகளையே குறிக்கிறது. வடுகன் தீயினாலும் சுடுவான், நாவினாலும் சுடுவான் என்பதே திப்பாட்டன் திருவள்ளுவர் தமிழ் மறவருக்கு சொன்ன எச்சரிக்கை.
ஆனால், பிற்பாடு வந்தேறி வடுக திராவிட திம்மிகளின் தலைவரான கருணாநிதியோ, “நெருப்பு சுட்ட புண்கூட ஆறிவிடும், ஆனால் வெறுப்பு கொண்டு திட்டிய சொற்கள் விளைவித்த துன்பம் ஆறவே ஆறாது” என நெருப்பு வெறுப்பு வார்த்தை விளையாட்டு விளையாடி வடுகருக்கு ஆதரவான போக்கில் மாற்றி எழுதினார்.
திராவிட வடுக வந்தேறிகள், வரலாற்றை எப்படியெல்லாம் திரித்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு சோறு பதம் இந்த நிகழ்வு.
* * * * * *
‘தீரா விஷம்’ என்கிற ஆரிய சமஸ்கிருத வடுக வந்தேறிச் சொல்லையே தமிழில் ‘திராவிடம்’ என்று பொருள்மாறு மயக்க அணியை பயன்படுத்தி திராவிட வடுக வந்தேறி தான்தோன்றிகள் மாற்றிவிட்டதாக தமிழ் தேசிய மொழி ஆய்வாளரும், தீவிர உணர்வாளருமான மயில் மாணிக்கம் ‘திராவிட வடுக வந்தேறிகளின் திரிபுரசுந்தரி தீவிர விளையாட்டு’ என்கிற ஆய்வுநூலில் அம்மணப்படுத்தி இருக்கிறார்.
* * * * * *
‘சீமான்’ என்கிற தூயத்தமிழ் சொல்லையே ஆங்கில திராவிட வடுக வந்தேறிகள், வெட்கமே இல்லாமல் அப்படியே எடுத்துக்கொண்டு ‘see man’ என்கிற வார்த்தைத் தொடரை உருவாக்கி இருக்கிறார்கள்.
இவ்வாறே முப்பாட்டன் முருகனின் தமிழ்தேசிய ஆயுதமான ‘வேல்’ என்பதையே well என்று ‘நல்லது’ என்கிற பொருள்படும் வார்த்தையாகவும், கிணறு என்கிற அர்த்தத்தை தரும் வார்த்தையாகவும் வடுகர்கள் வெட்கமே இல்லாமல் திருடியிருக்கிறார்கள்
* * * * * *
சமீபமாக தமிழிலக்கிய எழுத்தாளர்களுக்கும் தமிழ்ச்சாதியினருக்குமான மோதலை திராவிட வடுக வந்தேறிகளே திட்டமிட்டு ஏற்படுத்தி வருகிறார்களோ என்கிற ஐயம் நமக்கு தோன்றுகிறது.
உதாரணமாக எழுத்தாளர் ‘புலியூர் முருகேசன்’ அவர்களது பெயரை வைத்தே நாம் ஆய்வு செய்து நிரூபிக்க முடியும். புலி என்பது தமிழ் தேசியப் பேரரசான சோழனின் கொடியில் இடம்பெற்ற தமிழ்தேசிய விலங்கு (பிற்பாடு இந்திய ஆரிய வடுக வந்தேறி கும்பல் புலியை நம்மிடமிருந்து அபகரித்து இந்திய தேசிய விலங்காக அறிவித்திருக்கிறார்கள்). மேலும் ‘புலி’ என்பது சமகாலத்தில் தமிழ்தேசிய வீரத்தின் அடையாளமும் கூட. முருகேசன் என்கிற பெயர் நம் முப்பாட்டன் முருகனை குறியீடாக உணர்த்துகிறது. இப்படி முழுக்க தமிழ் தேசிய தன்மையோடு ஒரு எழுத்தாளன் தனக்கு புனைபெயர் சூட்டிக்கொண்டால் திராவிட வடுக வந்தேறிகள் சும்மாவா இருப்பார்கள்? தமிழ்சாதியினரை தூண்டிவிட்டு தமிழனுக்கு தமிழனையே எதிரியாக்கி மோதிக்கொள்ள வைத்திருக்கிறார்கள்.
இதேதான் எழுத்தாளர் பெ.முருகன் விவகாரத்திலும் நடந்திருக்கிறது. முப்பாட்டன் முருகனின் பெயர்தான் அவர் பெயரும் என்றாலும் திராவிட வடுக வந்தேறிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்துக்கொண்டு திராவிட வடுக வந்தேறிகளின் தெய்வமான பெருமாளின் பெயரையும் தன் பெயருக்கு முன்பாக சூட்டிக்கொண்டதுதான் அவரது தவறு. அந்த தவறினை உணர்ந்து ‘பெருமாள்’ என்கிற வடுக வந்தேறி இடுபெயரினை துறந்து தமிழ்தேசியத்துக்கு அவர் மீண்டு வந்திருக்கிறார்.
* * * * * *
மக்கள் முதல்வர் நாமம் வாழ்க. மகத்தான தமிழ் தேசியம் ஓங்குக.
இன்று இந்திய தேசிய ஆரிய வடுக கும்பல் புராணகாலத்திலேயே அவர்கள் விமானம் கண்டுபிடித்துவிட்டதாக கூறி புஷ்பகவிமானம், அது இதுவென்று கதை விடுகிறார்கள். உலகின் முதல் விமானத்தை ஓட்டியது முப்பாட்டன் முருகனே. மயில் வாகனம் விமானப் போக்குவரத்து நிறுவனத்தை உருவாக்கி, விமானத்தில் உலகை ஒரு சுற்று சுற்றி முப்பாட்டன் முருகன் அன்றே உலகசாதனை படைத்துவிட்டான்.
* * * * * *
இன்று நாகரிக தொலைக்காட்சியில் (fashion tv) உடையலங்கார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. உலகின் முதல் நாகரிக நடை நிகழ்வை (fashion walk) நடத்திக்காட்டியது நம் முப்பாட்டன் முருகனே என்கிற பேருண்மையை மேற்கத்திய வடுக வந்தேறிகள் உணரவேண்டும்.
இன்று இருகச்சை (two piece) ஆடைதான் நாகரிகம் என்று இந்த வந்தேறிகள் கூப்பாடு போடுகிறார்கள். ஆனால் நம் முப்பாட்டன் முருகனோ பழனி மலை மீதேறி ஒருகச்சை (single piece) ஆடை அணிந்து, தமிழனின் நாகரிகத்தை அன்றே குன்றிலிட்ட விளக்காக பறைசாற்றியிருக்கிறான். இன்று எதுவெல்லாம் நாகரிகம் என்று உலகம் நம்புகிறதோ, அதையெல்லாம் முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே லெமூரிய தமிழ் தேசிய பேரரசு, முப்பாட்டன் முருகனின் ஆட்சிக்காலத்தில் சாதித்துக் காட்டியிருக்கிறது.
* * * * * *
முப்பாட்டனின் வழித்தோன்றலான திப்பாட்டன் திருவள்ளுவர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வடுக வந்தேறிகளின் தமிழ்நில ஆக்கிரமிப்பை தமிழ்தேசிய நீதிநூலான திருக்குறளில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
அதாவது இந்த தமிழ்தேசிய கீதத்தின் இறுதியில் இடம்பெறும் ‘வடு’ என்கிற சொல், திராவிட வடுக வந்தேறிகளையே குறிக்கிறது. வடுகன் தீயினாலும் சுடுவான், நாவினாலும் சுடுவான் என்பதே திப்பாட்டன் திருவள்ளுவர் தமிழ் மறவருக்கு சொன்ன எச்சரிக்கை.
ஆனால், பிற்பாடு வந்தேறி வடுக திராவிட திம்மிகளின் தலைவரான கருணாநிதியோ, “நெருப்பு சுட்ட புண்கூட ஆறிவிடும், ஆனால் வெறுப்பு கொண்டு திட்டிய சொற்கள் விளைவித்த துன்பம் ஆறவே ஆறாது” என நெருப்பு வெறுப்பு வார்த்தை விளையாட்டு விளையாடி வடுகருக்கு ஆதரவான போக்கில் மாற்றி எழுதினார்.
திராவிட வடுக வந்தேறிகள், வரலாற்றை எப்படியெல்லாம் திரித்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு சோறு பதம் இந்த நிகழ்வு.
* * * * * *
‘தீரா விஷம்’ என்கிற ஆரிய சமஸ்கிருத வடுக வந்தேறிச் சொல்லையே தமிழில் ‘திராவிடம்’ என்று பொருள்மாறு மயக்க அணியை பயன்படுத்தி திராவிட வடுக வந்தேறி தான்தோன்றிகள் மாற்றிவிட்டதாக தமிழ் தேசிய மொழி ஆய்வாளரும், தீவிர உணர்வாளருமான மயில் மாணிக்கம் ‘திராவிட வடுக வந்தேறிகளின் திரிபுரசுந்தரி தீவிர விளையாட்டு’ என்கிற ஆய்வுநூலில் அம்மணப்படுத்தி இருக்கிறார்.
* * * * * *
‘சீமான்’ என்கிற தூயத்தமிழ் சொல்லையே ஆங்கில திராவிட வடுக வந்தேறிகள், வெட்கமே இல்லாமல் அப்படியே எடுத்துக்கொண்டு ‘see man’ என்கிற வார்த்தைத் தொடரை உருவாக்கி இருக்கிறார்கள்.
இவ்வாறே முப்பாட்டன் முருகனின் தமிழ்தேசிய ஆயுதமான ‘வேல்’ என்பதையே well என்று ‘நல்லது’ என்கிற பொருள்படும் வார்த்தையாகவும், கிணறு என்கிற அர்த்தத்தை தரும் வார்த்தையாகவும் வடுகர்கள் வெட்கமே இல்லாமல் திருடியிருக்கிறார்கள்
* * * * * *
சமீபமாக தமிழிலக்கிய எழுத்தாளர்களுக்கும் தமிழ்ச்சாதியினருக்குமான மோதலை திராவிட வடுக வந்தேறிகளே திட்டமிட்டு ஏற்படுத்தி வருகிறார்களோ என்கிற ஐயம் நமக்கு தோன்றுகிறது.
உதாரணமாக எழுத்தாளர் ‘புலியூர் முருகேசன்’ அவர்களது பெயரை வைத்தே நாம் ஆய்வு செய்து நிரூபிக்க முடியும். புலி என்பது தமிழ் தேசியப் பேரரசான சோழனின் கொடியில் இடம்பெற்ற தமிழ்தேசிய விலங்கு (பிற்பாடு இந்திய ஆரிய வடுக வந்தேறி கும்பல் புலியை நம்மிடமிருந்து அபகரித்து இந்திய தேசிய விலங்காக அறிவித்திருக்கிறார்கள்). மேலும் ‘புலி’ என்பது சமகாலத்தில் தமிழ்தேசிய வீரத்தின் அடையாளமும் கூட. முருகேசன் என்கிற பெயர் நம் முப்பாட்டன் முருகனை குறியீடாக உணர்த்துகிறது. இப்படி முழுக்க தமிழ் தேசிய தன்மையோடு ஒரு எழுத்தாளன் தனக்கு புனைபெயர் சூட்டிக்கொண்டால் திராவிட வடுக வந்தேறிகள் சும்மாவா இருப்பார்கள்? தமிழ்சாதியினரை தூண்டிவிட்டு தமிழனுக்கு தமிழனையே எதிரியாக்கி மோதிக்கொள்ள வைத்திருக்கிறார்கள்.
இதேதான் எழுத்தாளர் பெ.முருகன் விவகாரத்திலும் நடந்திருக்கிறது. முப்பாட்டன் முருகனின் பெயர்தான் அவர் பெயரும் என்றாலும் திராவிட வடுக வந்தேறிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்துக்கொண்டு திராவிட வடுக வந்தேறிகளின் தெய்வமான பெருமாளின் பெயரையும் தன் பெயருக்கு முன்பாக சூட்டிக்கொண்டதுதான் அவரது தவறு. அந்த தவறினை உணர்ந்து ‘பெருமாள்’ என்கிற வடுக வந்தேறி இடுபெயரினை துறந்து தமிழ்தேசியத்துக்கு அவர் மீண்டு வந்திருக்கிறார்.
* * * * * *
மக்கள் முதல்வர் நாமம் வாழ்க. மகத்தான தமிழ் தேசியம் ஓங்குக.